என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி
Byமாலை மலர்15 Sep 2021 4:10 PM GMT (Updated: 15 Sep 2021 4:10 PM GMT)
கோவை மாவட்டத்தில் பூங்கா, திரையரங்குகள், மால்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது, தினசரி பாதிப்பு சென்னையைவிட கோவையில் அதிகமாக பதிவானது. பின்னர் மாவட்ட நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து கட்டுக்குள் கொண்டு வந்தது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1500-ல் இருந்து 1650-க்குள் இருந்து வருகிறது. சில நாட்கள் 1600-ஐ தாண்டுகிறது. சில நாட்கள் 1600-க்குக்கீழ் பதிவாகி வருகிறது. மாவட்ட அளவில் சென்னையைக் காட்டிலும் கோவையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வருகிறது.
இருந்த போதிலும் வருகிற 30-ந்தேதி வரை கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்கள், பூங்காக்கள், மால்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், அடுமனைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டுமே இயங்கலாம்.
இதற்கிடையே தனியார் கல்லூரி விடுதியில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X