என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
களக்காடு அருகே மாமனாரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மருமகன் கைது
நெல்லை:
களக்காடு அருகே உள்ள நெடுவிளையை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 80). இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (59) என்பவர் திருமணம் செய்துள்ளார்.
குடும்பபிரச்சினை தொடர்பாக கிருஷ்ணன், தனது மனைவியின் அண்ணன் மனைவியான இசக்கியம்மாளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டினார். இதனால் பொன்னுத்துரை, கிருஷ்ணனை வெட்டினார். இது தொடர்பாக மாமனார், மருகனுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணன் அரிவாளுடன் பொன்னுத்துரையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த பொன்னுதுரையை அவதூறாக பேசினார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அரிவாளால் பொன்னுத்தரையை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பொன்னுத்துரை இன்று பரிதாபமாக உயிரிழந்தார். களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்