என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளி விற்பனை செய்த 3 பேர் கைது
Byமாலை மலர்14 Sep 2021 11:31 AM GMT (Updated: 14 Sep 2021 11:31 AM GMT)
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் அனுமதியில்லாமல் மணல் அள்ளி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் (23), வினோத் ராஜ் (30). இருவரும் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான கொள்ளிடம் படுகையில் உள்ள செங்கல் கால்வாய் குழியிலிருந்து எதிர்கரையிலுள்ள அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு (43) சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி ஏற்றி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் அனுமதியில்லாமல் மணல் அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே ஜே.சி.பி. எந்திரத்தையும் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து மரூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்று, குளஞ்சியப்பன், பாண்டியன் மற்றும் வினோத் ராஜ் ஆகிய மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார்கள்.
மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவையாறு அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் (23), வினோத் ராஜ் (30). இருவரும் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான கொள்ளிடம் படுகையில் உள்ள செங்கல் கால்வாய் குழியிலிருந்து எதிர்கரையிலுள்ள அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு (43) சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி ஏற்றி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் அனுமதியில்லாமல் மணல் அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே ஜே.சி.பி. எந்திரத்தையும் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து மரூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்று, குளஞ்சியப்பன், பாண்டியன் மற்றும் வினோத் ராஜ் ஆகிய மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார்கள்.
மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X