என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மோதி கோழிப்பண்ணை தொழிலாளி பலி
Byமாலை மலர்14 Sep 2021 11:13 AM GMT (Updated: 14 Sep 2021 11:13 AM GMT)
திலக்ராஜ் கரடிவாவியில் உள்ளகோழிபண்ணைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார்.
பல்லடம்:
பல்லடத்தில் உள்ள மேற்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திலகராஜ்(வயது28). இவருக்கு லாவண்யா(24) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் உள்ள கோழிபண்ணைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார்.பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் எலந்தகுட்டை அருகே வரும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த திலகராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் திலக்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X