என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்14 Sep 2021 11:08 AM GMT (Updated: 14 Sep 2021 11:08 AM GMT)
மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வள கொள்ளையை தடுக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பூர்:
மேற்கு தொடர்ச்சி மலையின் வளத்தை பாதுகாக்கவும், கனிமவள கொள்ளையை தடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கார்ப்பரேட் நிறுவனத்தினர் அமைக்கும் துறைமுகத்துக்காக தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வள கொள்ளையை தடுக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தலைமை பேச்சாளர் கிம்லர் கண்டன உரையாற்றினார். மாநில கட்டமைப்பு உறுப்பினர் சண்முகசுந்தரம், மண்டல செயலாளர் சுப்பிரமணியம், லஞ்ச ஒழிப்பு பாசறை செயலாளர் ஈஸ்வரன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இளந்தமிழன் ஷேக் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X