என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் ஓட்டல்களில் 32 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
Byமாலை மலர்14 Sep 2021 7:46 AM GMT (Updated: 14 Sep 2021 7:46 AM GMT)
அவிநாசி சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை பகுதியில் உள்ள 23 அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அவிநாசி சாலை, தாராபுரம் சாலை , காங்கயம் சாலை பகுதியில் உள்ள 23 அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உரிய பராமரிப்பு மேற்கொள்ளாத 12 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் 3 ஓட்டல்களில் கெட்டு போன இறைச்சி 32 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி உணவு தயாரிக்க வைத்திருந்த மசாலா பொருட்கள் முறையாக பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்தது கண்டறிந்து 9 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில்,
கெட்டு போன இறைச்சிகளை பயன்படுத்தினால் ஓட்டல்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஓட்டல் நிர்வாகங்கள் தரமான பொருட்களை கொண்டு உணவுகள் தயார் செய்ய வேண்டும். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X