என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணைகள் நிரம்பியதால் பி.ஏ.பி., 4-ம் மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி தண்ணீர் விநியோகம்
Byமாலை மலர்14 Sep 2021 5:18 AM GMT (Updated: 14 Sep 2021 5:18 AM GMT)
பாசனத்திற்கு 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 5 சுற்றுக்களாக மொத்தம் 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மடத்துக்குளம்:
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து 3-ந்தேதி ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 5 சுற்றுக்களாக மொத்தம் 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கால்வாய் பராமரிப்பு பணி தாமதம் காரணமாக 6-ந்தேதி முதல் பாசனத்திற்கு நீர் வழங்கும் பணி தொடங்கியது. 21 நாட்கள் வழங்கப்பட்டு 29-ந் தேதி முதல் சுற்று நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பியதால் தொடர்ந்து காண்டூர் கால்வாய் வழியாக நீர் எடுக்கப்பட்டு திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டது.
இதனால் இரண்டாம் சுற்றுக்கு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பாசனத்திற்கு 30-ந்தேதி முதல் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:
‘பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பியதால் தொடர்ந்து நீர் எடுக்கப்பட்டு நான்காம் மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X