search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் இன்று மேலும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,509 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்பு 1,500 என்ற அளவிலேயே இருந்து வந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக 1600-ஐ தாண்டியது. இந்த நிலையில் இன்று 1,580 ஆக குறைந்துள்ளது.

    இன்று 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,509 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 16,522 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழகத்தில் இதுவரை 26,35,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,83,707 பேர் குணமடைந்துள்ள நிலையில் 35,190 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்று  1,53,584 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 185 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×