search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கீழக்கரை அருகே கார் மோதி மாணவர் பலி

    கீழக்கரை அருகே கார் மோதி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பனைக்குளம்:

    கீழக்கரை சேனா தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம். இவரது மகன் முகம்மது இப்ராஹிம் (வயது21). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் ஷாஜ கான். இவரது மகன் செய்யது முகம்மது சுஹைப் (19). இவர் கீழக்கரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாறு குறுக்கே சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் முகம்மது இப்ராஹிம் பலியானார். படுகாயம் அடைந்த செய்யது சுஹைப் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். விபத்து குறித்து மண்டபம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×