என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊராட்சி எச்சரிக்கையை மீறி நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டும் பொதுமக்கள் - கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Byமாலை மலர்13 Sep 2021 4:42 AM GMT (Updated: 13 Sep 2021 4:42 AM GMT)
அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி நிர்வாகம் எல்லைக்குட்பட்ட நீர் வழித்தடத்தில் பலரும் குப்பை கொட்டுகின்றனர்.
அவிநாசி:
அவிநாசி நகர் மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமான குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இந்தநிலையில் நீர் வழித்தடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவது போன்ற செயல்களில், இறைச்சி கடைக்காரர்கள் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி நிர்வாகம் எல்லைக்குட்பட்ட நீர் வழித்தடத்தில் பலரும் குப்பை கொட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள ‘பிளக்ஸ் பேனரில்’, இவ்விடத்தில் மழைநீர் செல்லும் பல்லாவாரி உள்ளது.
இந்த நீரை தான் நாம் குடிக்கிறோம். இங்கு குப்பை கொட்டி மாசுப்படுத்த வேண்டாம். மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எச்சரிக்கையை மீறி மக்கள் குப்பைக் கொட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X