search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் இன்று மேலும் 1,608 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 16,473 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,608 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,33,839 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 1512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,82,198 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 22 பேர் உயிரிழக்க மொத்தம் 35,168 பேர் பலியாகியுள்ளனர். இன்று 1,55,807  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,42,21,200 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய பாசிட்டிவ் சதவீதம் 1.03 ஆகும்.
    Next Story
    ×