search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மடத்துக்குளத்தில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

    கண்ணில் வேறு ஏதாவது பாதிப்புகள், பார்வை குறைபாடுகள் இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    மடத்துக்குளம் :

    திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    மடத்துக்குளம் நால்ரோடு ஓம் சக்தி திருமண மண்டபத்தில்  நாளை காலை 8 மணி முதல் 1 மணிவரை நடக்கும் இம்முகாமில் கண்புரை, சர்க்கரைநோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்பு, குழந்தைகளின் கண் நோய், கருவிழியில் புண், நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்ணில் வேறு ஏதாவது பாதிப்புகள், பார்வை குறைபாடுகள் இருந்தால், இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கண் புரை உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டால், முகாம் நடக்கும் மதியம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். 

    உள்விழிலென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம். சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×