என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் புதிதாக 1587 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்8 Sep 2021 2:43 PM GMT (Updated: 8 Sep 2021 2:43 PM GMT)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 15 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 160303 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,27,365 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 15 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1594 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 16,180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 179, ஈரோட்டில் 117, செங்கல்பட்டில் 115 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X