என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்குகிறது
Byமாலை மலர்7 Sep 2021 7:34 AM GMT (Updated: 7 Sep 2021 7:34 AM GMT)
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 82 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 828 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 933 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியும் தினமும் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 14 லட்சத்து 36 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் 12 லட்சத்து 17 ஆயிரத்து 611 பேருக்கும் இரண்டாவது டோஸ் 2 லட்சத்து 17 ஆயிரத்து 714 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆகஸ்ட் 28-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரையிலான 7 நாட்களில் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:
மாவட்டத்தில் தோராய மக்கள் தொகை 27 லட்சம். இவர்களில் 48 சதவீதம் அதாவது 14.36 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும். சில நாட்களில் இது 50 சதவீதத்தை நெருங்கும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X