search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நேற்றைவிட சற்று அதிகரிப்பு... தமிழகத்தில் மேலும் 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 11 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,22,678 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1575 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 11 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக உயர்ந்துள்ளது. 

    அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,607 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,71,378 ஆக அதிகரித்துள்ளது. 

    தமிழகத்தில் தற்போது 16,282 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,62,119 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 165, ஈரோட்டில் 104, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 84 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×