search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் மில் தொழிலாளி வீட்டில் பணம் திருடிய பேரன் உள்பட 3 பேர் கைது

    மதுரையில் மில் தொழிலாளி வீட்டில் பணம் திருடிய பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஸ்டீபன் துரை மனைவி கரோலின் செல்வி (வயது 48). இவரது தந்தை இருதயராஜா (68). மில் தொழிலாளியான இவர் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இருதயராஜா வீட்டில் ரூ.70 ஆயிரம் திருடு போனது. இதுகுறித்து கரோலின் செல்வி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக வில்லாபுரம் ஏ.பி.கே. மெயின் ரோட்டை சேர்ந்த செல்லத்துரை மகன் ஜெப்ரின் நோயல் பாஸ்டின் (21) என்பவர் பிடிபட்டார். இவர் கரோலின் செல்வியின் அக்காள் மகன் ஆவார்.

    ஜெப்ரினுக்கு பணத் தேவை இருந்தது. அவர் விளாச்சேரி முனியாண்டிபுரத்தைச் சேர்ந்த முகேஷ் (22), வில்லாபுரம் பாரதியார் தெரு முகமது கவுஸ் (24) ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து தாத்தா வீட்டில் ரூ.70 ஆயிரம் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், பேரன் ஜெப்ரின் நோயல் பாஸ்டின், அவரது நண்பர்களான முகேஷ், முகமது கவுஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×