என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரக்கு வாகனத்தில் கடத்திய 2500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்2 Sep 2021 10:34 AM GMT (Updated: 2 Sep 2021 10:34 AM GMT)
அலங்காநல்லூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டி பகுதியில் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
காலை 3.30 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் சட்டவிரோதமாக 2,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ரேசன் அரிசியை கடத்தி வந்த மதுரை, காமராஜர் சாலையை சேர்ந்த பாலமுருகன் (வயது31), மாரியப்பன் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டி பகுதியில் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
காலை 3.30 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் சட்டவிரோதமாக 2,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ரேசன் அரிசியை கடத்தி வந்த மதுரை, காமராஜர் சாலையை சேர்ந்த பாலமுருகன் (வயது31), மாரியப்பன் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X