search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் அரிசி
    X
    ரேஷன் அரிசி

    சரக்கு வாகனத்தில் கடத்திய 2500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

    அலங்காநல்லூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் இருந்து ரே‌ஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டி பகுதியில் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    காலை 3.30 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் சட்டவிரோதமாக 2,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து ரேசன் அரிசியை கடத்தி வந்த மதுரை, காமராஜர் சாலையை சேர்ந்த பாலமுருகன் (வயது31), மாரியப்பன் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×