என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டத்தில் 500 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்1 Sep 2021 8:14 PM GMT (Updated: 1 Sep 2021 8:14 PM GMT)
மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் 367 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மல்லசமுத்திரம், சின்னமுதலைப்பட்டி உள்பட 6 பள்ளிகளில் சுமார் 500 மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X