search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    லாரி டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபருக்கு தர்ம அடி

    முருகன் வாலிபரை லாரிக்குள் வரவழைத்து செல்போனை கொடுத்துள்ளார்.
    பல்லடம்:

    சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் முருகன். இவர் நேற்றிரவு திருப்பூர் பல்லடம் மங்கலம் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தனது நண்பருக்கு போன் கால் செய்துவிட்டு தருகிறேன் என முருகனிடம் செல்போனை கேட்டுள்ளார். இதையடுத்து முருகன் அந்த வாலிபரை லாரிக்குள் வரவழைத்து செல்போனை கொடுத்துள்ளார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாலிபர் செல்போனுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்பகுதி பொதுமக்கள் வாலிபரை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் பல்லடம் மங்கலம் ரோடு டி.எம்.டி. நகரைச் சேர்ந்த தர்மராஜ் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×