search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

    திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (30-ந்தேதி) மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    * சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 10.10 மணி, 10.56 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் காட்டாங்குளத்தூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-காட்டாங்குளத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஆனால் பயணிகள் வசதிக்காக மதியம் 12 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×