என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்25 Aug 2021 11:31 AM GMT (Updated: 25 Aug 2021 11:31 AM GMT)
மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகம் தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன் ரஞ்சித்குமார் (வயது 35). இவர் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
பணியின் காரணமாக பரமன் ரஞ்சித்குமார் பெருங்குடியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இதனால் தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள வீடு பூட்டப்பட்டே இருக்கும். அவ்வப்போது பரமன் ரஞ்சித்குமார் கிராமத்திற்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இது குறித்து பரமன் ரஞ்சித்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் தும்மக்குண்டு வந்து வீட்டை பார்த்த போது மர்மநபர்கள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், வீட்டில் இருந்த எல்.இ.டி. 40 இன்ச் டிவி, 5 குத்துவிளக்கு மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகம் தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன் ரஞ்சித்குமார் (வயது 35). இவர் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
பணியின் காரணமாக பரமன் ரஞ்சித்குமார் பெருங்குடியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இதனால் தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள வீடு பூட்டப்பட்டே இருக்கும். அவ்வப்போது பரமன் ரஞ்சித்குமார் கிராமத்திற்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இது குறித்து பரமன் ரஞ்சித்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் தும்மக்குண்டு வந்து வீட்டை பார்த்த போது மர்மநபர்கள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், வீட்டில் இருந்த எல்.இ.டி. 40 இன்ச் டிவி, 5 குத்துவிளக்கு மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X