search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளை

    மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகம் தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன் ரஞ்சித்குமார் (வயது 35). இவர் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

    பணியின் காரணமாக பரமன் ரஞ்சித்குமார் பெருங்குடியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இதனால் தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள வீடு பூட்டப்பட்டே இருக்கும். அவ்வப்போது பரமன் ரஞ்சித்குமார் கிராமத்திற்கு வந்து செல்வார்.

    இந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இது குறித்து பரமன் ரஞ்சித்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் தும்மக்குண்டு வந்து வீட்டை பார்த்த போது மர்மநபர்கள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், வீட்டில் இருந்த எல்.இ.டி. 40 இன்ச் டிவி, 5 குத்துவிளக்கு மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×