என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாய் விரட்டியதில் புதருக்குள் விழுந்த மான் மீட்பு
Byமாலை மலர்22 Aug 2021 11:33 AM GMT (Updated: 22 Aug 2021 11:33 AM GMT)
அவினாசி பகுதியில் தண்ணீருக்காக மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
அவிநாசி:
அவிநாசி அருகே தெக்கலூர் குடியிருப்புப்பகுதிக்குள் உணவு தேடி வந்த 2 வயதுள்ள ஆண் மானை தெரு நாய்கள் விரட்டின. மிரண்டு ஓடிய மான் மயங்கிய நிலையில் அங்குள்ள புதரில் விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் மானை மீட்டு தெக்கலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடை டாக்டர் மானுக்கு சிகிச்சை அளித்தார். மயங்கிய நிலையில் இருந்த மானுக்கு ஊட்டச்சத்து நீர் வழங்கப்பட்டது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் மான் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அதன் வாழ்விடத்தில் மான் கொண்டு சென்று விடப்பட்டது. அவினாசி பகுதியில் தண்ணீருக்காக மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
எனவே மான்கள் வெளியே வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X