என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூரில் ரூ.1கோடிக்கு பருத்தி விற்பனை
Byமாலை மலர்21 Aug 2021 9:10 AM GMT (Updated: 21 Aug 2021 9:10 AM GMT)
விலை குவிண்டால் ரூ.6,200 முதல் ரூ.8,209 வரை விற்பனையானது. சராசரியாக ரூ.7,550க்கு விற்றது.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த மறைமுக ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 386 விவசாயிகள் தங்களுடைய 4,352 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 1,434 குவிண்டால் வரத்து இருந்த நிலையில் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 21 வணிகர்கள் விற்பனையில் பங்கேற்றனர். விலை குவிண்டால் ரூ.6,200 முதல் ரூ.8,209 வரை விற்பனையானது. சராசரியாக ரூ.7,550க்கு விற்றது. மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்து 794 க்கு விற்பனை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தனர். இந்த வார விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X