search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மூலனூரில் ரூ.1கோடிக்கு பருத்தி விற்பனை

    விலை குவிண்டால் ரூ.6,200 முதல் ரூ.8,209 வரை விற்பனையானது. சராசரியாக ரூ.7,550க்கு விற்றது.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த மறைமுக ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 386 விவசாயிகள் தங்களுடைய 4,352 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.

    மொத்தம் 1,434 குவிண்டால் வரத்து இருந்த நிலையில் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 21 வணிகர்கள் விற்பனையில் பங்கேற்றனர். விலை குவிண்டால் ரூ.6,200 முதல் ரூ.8,209 வரை விற்பனையானது. சராசரியாக ரூ.7,550க்கு விற்றது. மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்து 794 க்கு விற்பனை நடைபெற்றது.  

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தனர். இந்த வார விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.
    Next Story
    ×