search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் பணம் பறித்த ஆட்டோ டிரைவர் கைது

    சாத்தான்குளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் பணம் பறித்தது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (35). எல்லை பாதுகாப்பு படை வீரரான இவருக்கு சாத்தான்குளம் அடுத்த முதலூர் அடையலில் திருமணமாகியுள்ளது.

    கடந்த மாதம் இவர் மனைவியை பார்க்க சாத்தான்குளம் வந்து ஆட்டோவில் முதலூர் சென்று திரும்பினார். பின்னர் சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் அண்ணநகரைச் சேர்ந்த முருகனுடன் (38) மது அருந்தியதில் நடராஜன் மது போதையில் இருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர், நடராஜனிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்து தலைமறைவானார்.

    இதுகுறித்து நடராஜன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளாம்ராஜ் வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் முருகனை தேடி வந்தார். இந்நிலையில் நாகர்கோவில் இரைச்சகுளத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் முருகனை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×