search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

    மாணவி சபரியுடன் சென்னை அருகே இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு திருப்பூர் அழைத்து வந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பத்தூரை சேர்ந்தவர் சபரி (வயது 22). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். 

    இந்தநிலையில் திருப்பூரில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமிக்கும் சபரிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போன் நம்பரை பரிமாறி கொண்டு அடிக்கடி போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். 

    சம்பவத்தன்று சிறுமியை பார்ப்பதற்காக சபரி திருப்பூர் வந்தார். பின்னர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். மாணவி திடீரென மாயமானதால் அதிர்ச்சியான பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாணவியை போலீசார் தேடிவந்தனர். அப்போது மாணவி சபரியுடன் சென்னை அருகே இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு திருப்பூர் அழைத்து வந்தனர்.

    விசாரணையின் போது மாணவியை ஆசைவார்த்தை கூறி சபரி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சபரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×