search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு
    X
    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு

    நெல்லை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகள் மற்றும் ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் உடன் இணைந்த பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவுப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்கள் உடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகள் மற்றும் ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் உடன் இணைந்த பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×