என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை முதல் 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம்
Byமாலை மலர்5 Aug 2021 5:28 PM GMT (Updated: 5 Aug 2021 5:28 PM GMT)
தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அனைத்து பிரிவினரையும் திருப்திப்படுத்தும் என்றும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சென்னை:
இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
நாளை முதல் தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 கோவில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தியிருப்பதாகவும், இது அனைத்து பிரிவினரையும் திருப்திப்படுத்தும், எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் கூறினார்.
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யும் நடைமுறையும் தொடரும். விரும்புவோர் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X