என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை
Byமாலை மலர்4 Aug 2021 5:52 AM GMT (Updated: 4 Aug 2021 5:52 AM GMT)
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் இன்று முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை மூட உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி மாட்டு சந்தை நேற்று நடைபெற்றது. வழக்கத்தை விட வியாபாரிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் இன்று (4-ந் தேதி) முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை மூட உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாகவே நேற்று சந்தையில் வியாபாரிகள் அதிகம் கூடியிருந்தனர்.
நேற்று சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
சந்தைக்கு 2500 மாடுகள் வந்திருந்தன. 1000 வியாபாரிகள் வரை வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக விற்பனை அமோகமாக இருந்தது.
காங்கேயம் காளை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
நேற்று மட்டும் சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி மாட்டு சந்தை நேற்று நடைபெற்றது. வழக்கத்தை விட வியாபாரிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் இன்று (4-ந் தேதி) முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை மூட உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாகவே நேற்று சந்தையில் வியாபாரிகள் அதிகம் கூடியிருந்தனர்.
நேற்று சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
சந்தைக்கு 2500 மாடுகள் வந்திருந்தன. 1000 வியாபாரிகள் வரை வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக விற்பனை அமோகமாக இருந்தது.
காங்கேயம் காளை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
நேற்று மட்டும் சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X