என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கோவில் விழா: 100 ஆடு, 600 சேவல்களை பலியிட்டு படையல்
Byமாலை மலர்3 Aug 2021 1:47 AM GMT (Updated: 3 Aug 2021 1:47 AM GMT)
கோவில் விழாவில் 100 ஆடுகள், 600 சேவல்களை பலியிட்டு உப்பு, வேப்பிலையை பயன்படுத்தி சமைத்து படைத்தனர். இதற்கான பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
மதுரை :
மதுரை மாவட்டம் வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் கல்லுபடையல் விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டிருந்த 100 ஆடுகள் மற்றும் 600 சேவல்கள் கோவில் அருகே பலியிடப்பட்டன.
பின்னர் 3 கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு, பலியிடப்பட்ட ஆடுகள், சேவல்களை சுத்தம் செய்து, பின்னர் வரிசையாக வைத்திருந்த அடுப்பில் மண் பானைகளில் சமைத்தனர். இந்த இறைச்சி சமையலுக்கு உப்பு, வேப்பிலைகளை மட்டுமே பயன்படுத்தினர். அதை தொடர்ந்து, கோவிலின் முன்பு சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.
படையல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை அதாவது சர்க்கரை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
படையல் பூஜை முடிந்த பின்னர்தான் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் விருந்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். உப்பு, வேப்ப இலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட இறைச்சி பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்டம் வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் கல்லுபடையல் விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டிருந்த 100 ஆடுகள் மற்றும் 600 சேவல்கள் கோவில் அருகே பலியிடப்பட்டன.
பின்னர் 3 கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு, பலியிடப்பட்ட ஆடுகள், சேவல்களை சுத்தம் செய்து, பின்னர் வரிசையாக வைத்திருந்த அடுப்பில் மண் பானைகளில் சமைத்தனர். இந்த இறைச்சி சமையலுக்கு உப்பு, வேப்பிலைகளை மட்டுமே பயன்படுத்தினர். அதை தொடர்ந்து, கோவிலின் முன்பு சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.
படையல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை அதாவது சர்க்கரை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
படையல் பூஜை முடிந்த பின்னர்தான் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் விருந்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். உப்பு, வேப்ப இலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட இறைச்சி பரிமாறப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X