search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரி மாவட்டத்தில் 7 மாதத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் கோட்டார் மாஞ்சான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு, கஞ்சா வழக்கு, போஸ்கோ வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. தொடர்ந்து இவர், குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். சூர்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.

    கோட்டார் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 19). இவர் போஸ்கோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆசாரிபள்ளம் குருகுலம் சாலையைச் சேர்ந்தவர் ஆல்டோ கைகேல் டோனிக் (வயது 23). இவர் மீதும் போஸ்கோ வழக்கு உள்ளது.

    இவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×