என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் 7 மாதத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்31 July 2021 11:05 AM GMT (Updated: 31 July 2021 11:05 AM GMT)
குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் கோட்டார் மாஞ்சான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு, கஞ்சா வழக்கு, போஸ்கோ வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. தொடர்ந்து இவர், குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். சூர்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.
கோட்டார் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 19). இவர் போஸ்கோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆசாரிபள்ளம் குருகுலம் சாலையைச் சேர்ந்தவர் ஆல்டோ கைகேல் டோனிக் (வயது 23). இவர் மீதும் போஸ்கோ வழக்கு உள்ளது.
இவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் கோட்டார் மாஞ்சான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு, கஞ்சா வழக்கு, போஸ்கோ வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. தொடர்ந்து இவர், குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். சூர்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.
கோட்டார் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 19). இவர் போஸ்கோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆசாரிபள்ளம் குருகுலம் சாலையைச் சேர்ந்தவர் ஆல்டோ கைகேல் டோனிக் (வயது 23). இவர் மீதும் போஸ்கோ வழக்கு உள்ளது.
இவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X