search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அன்னூரில் அதிக போதைக்காக மதுபாட்டிலில் ரசாயனம் கலந்து விற்ற 2 பேர் கைது

    அன்னூரில் அதிக போதைக்காக மதுபாட்டிலில் ரசாயனம் கலந்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்:

    அன்னூர்- கோவை சாலையில் கடத்தூர் பிரிவில் தனியாருக்கு சொந்தமான உணவகத்தில் அதிக போதைக்காக ரசாயனம் கலந்த மது விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் அன்னூர் போலீசார் அங்கு சென்றனர்.போலீசார் வருவதை பார்த்ததும் 2 பேர் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடனடியாக அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் உணவகத்தில் பணியாற்றும் சுரேஷ்(27), முருகன்(45) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த மதுபாட்டில்களை சோதித்த போது அதிக போதைக்காக மதுவில் ரசாயானம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, 89 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் ஓதிமலை ரோடு, மன்னீஸ்வரர் கோவில் அருகே மது அருந்த அனுமதித்த சக்திவேல், முனுசாமி ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    Next Story
    ×