search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொச்சுவேலி ரெயில் நிற்காது என அறிவிப்பு-திருப்பூர் பயணிகள் ஏமாற்றம்

    இந்த ரெயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை ரெயில் நிலையங்களில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வியாழன், ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம், 1:10 மணிக்கு கொச்சு வேலி சென்று சேரும். மறுமார்க்கமாக புதன், வெள்ளி, திங்கள் கிழமை கொச்சுவேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 9:30க்கு யஷ்வந்த்பூர் சென்று சேரும்.

    இந்த ரெயில் 9 படுக்கை வசதி, 3 ஏ.சி., என 12 பெட்டிகளை கொண்டது. இந்த ரெயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை ரெயில் நிலையங்களில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே திருப்பூரில் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×