search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம்

    திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.
    திருப்பூர்:

    மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அனந்த நாயகி பொள்ளாச்சிக்கும், திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முரளி அவினாசி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், தாராபுரம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பல்லடம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மங்கலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், காமநாயக்கன் பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உடுமலை இன்ஸ்பெக்டராகவும், காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தாராபுரம் இன்ஸ்பெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஊத்துகுளி காவல் நிலைய  இன்ஸ்பெக்டராவும், தாராபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நர்மதாதேவி ஈரோடு மாவட்டத்திற்கும், தாராபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி தாராபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மங்கலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் நீலாதேவி பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஊட்டிக்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×