என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்28 July 2021 8:55 AM GMT (Updated: 28 July 2021 8:55 AM GMT)
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூரில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவு படி கடந்த சில நாட்களாக போலீசார் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நல்லூர் போலீசார் முதலிபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர் கோவை உக்கடம்பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் (வயது 34) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை நல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்த போலீசார் விற்பனைக்காக கொண்டு வந்த 103 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X