என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரும்பாறை பகுதியில் மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மின்தடை
பெரும்பாறை:
பெரும்பாறை மலைப் பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கியுள்ளன. இந்த பழங்களை சாப்பிட இரவு நேரங்களில் வவ்வால்கள் வருகின்றன. அப்போது சில வவ்வால்கள் மின் வயரில் சிக்கி இறந்து தொங்குகின்றன. இதனால் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர் அருகே கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக் காடு, மங்களம்கொம்பு, பட்டலங்காடு பிரிவு, கானல்காடு, தடியன்குடிசை, கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதி மலைக் கிராமங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
இதனால் கடந்த 3 நாட்களாக மின் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. வவ்வால்களால் பழுதடைந்த மின் கம்பிகளை சீரமைத்து மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்