search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேரையூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

    பேரையூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரோஜா மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சாப்டூர், வில்லூர், பேரையூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.இதில் பேரையூரில் ராஜமாணிக்கம் (வயது 40), லாலாபுரத்தைச் சேர்ந்த பத்மாவதி (60), எஸ்.கோட்டைப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (53), அத்திப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் (60), செல்வராஜன் (64) ஆகியோர் பெட்டிக்கடைகளில் வைத்து புகையிலை பொருட்களை விற்றதாக கைது செய்யப்பட்டனர். மொத்தம் 1,481 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×