என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்கா-தொழில்துறையினர் ஆய்வு
Byமாலை மலர்24 July 2021 11:41 AM GMT (Updated: 24 July 2021 11:41 AM GMT)
3 மாவட்டங்களிலும் சிப்காட்டிற்கு சொந்தமான இடங்களை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் :
தமிழக அரசு ஆயத்த ஆடை பூங்காவை தென் மாவட்டங்களில் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு தமிழக அரசு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளது.
அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், இணை செயலாளர் செந்தில்குமார், உள்கட்டமைப்பு துணை கமிட்டி தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் நவமணி மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சிப்காட் அதிகாரிகள் அருண்குமார், ரவீந்திரா, லீயோ உள்பட பலர் 3 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.
3 மாவட்டங்களிலும் சிப்காட்டிற்கு சொந்தமான இடங்களை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். குடிநீர் வசதி, தொழிலாளர்கள் வசதி, உள்கட்டமைப்புக்கு தேவையான வசதி போன்றவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X