என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற சிறுமி கார் மோதி பலி
Byமாலை மலர்23 July 2021 1:16 PM GMT (Updated: 23 July 2021 1:16 PM GMT)
வடமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற சிறுமி கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:
வடமதுரை அருகில் உள்ள தென்னம்பட்டியை சேர்ந்த காணிக்கைராஜ் மகள் நிஷாதேவி(9). 3-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை தென்னம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் சிறுமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு நிஷாதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த எரியோடு குருக்கலையான்பட்டியை சேர்ந்த சக்திவேல்(38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X