search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    செஞ்சி அருகே விவசாயி அடித்துக்கொலை? - போலீசார் விசாரணை

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வல்லம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கண்டாச்சிமேடு மதுரா ஈச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (45).விவசாயி. இவர் நேற்று இரவு வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    அதன் பின்னர் இரவு நீண்டநேரமாகியும் சிவக்குமார் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிவக்குமாரை தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கல்லடிகுப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சிவக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் சிவக்குமார் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவர்கள் இது குறித்து பெரியதச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த சிவக்குமாரின் உடலை பார்வையிட்டனர். அவரது உடலில் தலை,மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. இதையடுத்து சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து புகாரின் பேரில் பெரிய தச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார் எப்படி இறந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×