என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பறிமுதல் வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க காவல்துறை முடிவு
Byமாலை மலர்21 July 2021 11:24 AM GMT (Updated: 21 July 2021 11:24 AM GMT)
நீண்ட நாட்களாக அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுவதால் அவை பழுதடைந்து துருப்பிடித்து விடுகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், உரிய ஆவணங்களின்றி இயங்கும் வாகனங்கள்,விபத்தில் சிக்கிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வாகனங்கள் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
நீண்ட நாட்களாக அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுவதால் அவை பழுதடைந்து துருப்பிடித்து விடுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்களை மட்டும் பாதுகாப்பாக வைக்கவும், மற்ற வாகனங்களை கணக்கெடுத்து உரிமையாளரிடம் அபராதம் வசூலித்து திரும்ப ஒப்படைக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் ஷாய் உத்தரவிட்டார்.
அதன் பேரில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. உரிய முறையில் கணக்கெடுத்து நீதிமன்ற வாகனங்களைத்தவிர மற்ற வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X