search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டா தினம் சிறப்பு பூஜை

    மகா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டா தினம் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. சபரிமலை அய்யப்பன் கோவில் முதன்மை தந்திரி ஸ்ரீகண்டரு மோகனரு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, அதிகாலையில் கணபதி ஹோமமும் தொடர்ந்து வஷ்டா அபிஷேகமும் நடந்தது. பின் 108 வலம்புரி சங்காபிஷேகம், களபாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அய்யப்ப சுவாமி அருள்பாலித்தார். 

    மகா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அய்யப்ப சுவாமிக்கு மகா தீபாராதனை, புஷ்பாபிஷேக சிறப்பு பூஜையும் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×