search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் அருகே என்ஜினீயர் வீட்டை உடைத்து கொள்ளை

    கார்த்திகா செல்வியின் தாயார் வீடு அருகில் உள்ள கிறிஸ்தவ அனுப்ப தெருவில் உள்ளது. இதனால் அடிக்கடி வீட்டைபூட்டிவிட்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விடுவார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகர் பகுதியில் உள்ள மாடி வீட்டில் குடியிருந்து வருபவர் நாகராஜ் (வயது 32) என்ஜினீயர். இவரது மனைவி கார்த்திகா செல்வி. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். கார்த்திகா செல்வியின் தாயார் வீடு அருகில் உள்ள கிறிஸ்தவ அனுப்ப தெருவில் உள்ளது. இதனால் அடிக்கடி வீட்டைபூட்டிவிட்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விடுவார். கடந்த 13-ந்தேதியும் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்றனர். 

    இந்த நிலையில் நாகராஜுக்கு திடீரென செல்போன் அழைப்பு வந்தது. அதில் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி தகவலை கூறினார். வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதாகவும், மர்மநபர்கள் வந்திருக்கலாம் எனவும் கூறினார். இதையடுத்து நாகராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டையும், பீரோவின் பூட்டையும் உடைத்து லாக்கரில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×