என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசாரை பார்த்து திருநங்கைகள் பயப்பட வேண்டாம்-கமிஷனர் பேச்சு
Byமாலை மலர்17 July 2021 9:17 AM GMT (Updated: 17 July 2021 9:17 AM GMT)
முகாமில் கலந்து கொண்ட திருநங்கைகளை தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற பதிவு செய்யுமாறு வலியுறுத்தபட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டியில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் இன்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் நடந்தது. முகாமில் கலந்து கொண்ட திருநங்கைகளை தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற பதிவு செய்யுமாறு வலியுறுத்தபட்டது.
இதில் போலீஸ் கமிஷனர் வனிதா பேசியதாவது:-
இந்தியாவில் திருநங்கைகளுக்கு என அங்கீகாரம் வழங்கபட்டுள்ளது. அவர்களை பற்றிய உண்மையான அக்கறை எனக்கு உண்டு. திருப்பூரில் சில திருநங்கைகள் சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறார்கள் என புகார்கள் வந்து கொண்டிருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தியதில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். நீங்கள் சமூக போராளி.
உயர் பதவிகளுக்கு வர வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள். எங்களுடைய விருந்தாளிகள் நீங்கள். எங்களை பார்த்ததும் பயந்து செல்ல வேண்டாம். உயிர் இருப்பதே போராடுவதற்காகத்தான் என்றார். இதில் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், ரவி, சமூக நல அலுவலர் மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X