என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லத்தில் சில்லறை கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
Byமாலை மலர்16 July 2021 4:33 PM GMT (Updated: 16 July 2021 4:33 PM GMT)
வல்லத்தில் சில்லறை கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள வல்லம் அகிலாங்கரை தெரு பகுதியில் நேற்று ஸ்கூட்டரில் வந்த ஒருவர் அங்கு நடந்து வந்தவரிடம் ரூ.2 ஆயிரத்துக்கு சில்லறை கேட்பதுபோல் நடித்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதை அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வல்லம் புறவழிச்சாலை அருகே ஸ்கூட்டரில் சென்ற நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் தஞ்சை கரந்தை பூக்கொல்லை பகுதியை சேர்ந்த கனகசுந்தரம் (வயது50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது பாப்பாநாடு, தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த வல்லம் போலீசார் கனகசுந்தரத்தை கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X