என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் ரூ.21 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
Byமாலை மலர்16 July 2021 8:21 AM GMT (Updated: 16 July 2021 8:21 AM GMT)
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் மாவட்ட விவசாயிகள் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் மாவட்ட விவசாயிகள் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 53 விவசாயிகள் 38 ஆயிரத்து 709 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், முத்தூர்,வெள்ளகோவில்,கொடுமுடி, ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.61.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.48.56 க்கும் ஏலம் நடைபெற்றது. நேற்று மொத்தம் ரூ.21 லட்சத்து 66 ஆயிரத்து 421க்கு ஏலம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X