என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வு: தமிழகத்தில் கூடுதலாக நான்கு நகரங்களில் தேர்வு மையங்கள்
Byமாலை மலர்15 July 2021 11:06 AM GMT (Updated: 15 July 2021 11:06 AM GMT)
தமிழகத்தில் கடந்த ஆண்டு 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 18 நகரங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தப்படும். கடந்த ஆண்டு 155 நகரங்களில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும், தேர்வு நடத்தப்படும் நகரங்கள் 155-ல் 198-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020-ல் தேர்வு எழுதும் மையம் 3862 ஆக இருந்தது. மையத்தின் எண்ணிக்கையும் அதிரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக செங்கல்பட்டு, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் தேர்வு நடத்தப்படும் நகரங்கள் 18-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு செப்டம்பர் 12-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13-ந்தேதி (நேற்றுமுன்தினம்) மாலை ஐந்து மணிக்கு ஆன்லைன் விண்ணப்பம் பதிவு தொடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X