என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பாபிஷேகம் நடத்தப்படாததால் சிதலமடையும் கோவில்கள்
Byமாலை மலர்15 July 2021 10:30 AM GMT (Updated: 15 July 2021 10:30 AM GMT)
கோவில்கள் சிதிலமடைந்து வரலாற்று சிறப்புகள் அழிந்து வருகின்றன.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி கோவில், பொங்காளியம்மன், மாகாளியம்மன், அருளானந்த ஈஸ்வரர், வேணுகோபால கிருஷ்ணர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்தவை. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். பெரும்பாலான கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் கோவில்கள் சிதிலமடைந்து வருகின்றன.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்:
கோவில்கள் சிதிலமடைந்து வரலாற்று சிறப்புகள் அழிந்து வருகின்றன. கடந்த ஆண்டு பிரசித்தி பெற்ற கடைவீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கோவில் கமிட்டியும் அமைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X