என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்ப்பாக்கத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Byமாலை மலர்14 July 2021 8:03 AM GMT (Updated: 14 July 2021 8:03 AM GMT)
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த 38 வயதான பெண் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் உணவகம் நடத்தி வருகிறார். இவர்களது வீட்டில் வேலை செய்யும் நபரை ஆஸ்பிரின் கார்டன் சாலையில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு மோட்டார்சைக்கிளில் நேற்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். இதையடுத்து வாலிபர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். இதுபற்றி கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நடுரோட்டில் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X