என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்காச்சோள கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்11 July 2021 7:56 AM GMT (Updated: 11 July 2021 7:56 AM GMT)
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளம் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம் முக்கிய சாகுபடியாக உள்ளது. அமராவதி அணையின் நீர் இருப்பு பயன்படுத்தி ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நடவு செய்யப்படுகிறது.
இதன் வாயிலாக ஒரு ஆண்டுக்கு 5,000 டன் அளவில் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளம் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,100 வரை விலை கிடைக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.32 ஆயிரம் வரை செலவாகிறது. 3 மாத பராமரிப்புக்கு பின் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை வரை மகசூல் எதிர்பார்த்தோம். ஆனால் சராசரியாக 22 முதல் 25 மூட்டைகள் மகசூல் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் நடப்பாண்டு சாகுபடியில் தயக்கத்தோடு நடவு செய்தோம். தற்போது குவிண்டால் ரூ. 2,100க்கு கொள்முதல் செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X