search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மக்காச்சோள கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளம் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம் முக்கிய சாகுபடியாக உள்ளது. அமராவதி அணையின் நீர் இருப்பு பயன்படுத்தி ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நடவு செய்யப்படுகிறது.

    இதன் வாயிலாக ஒரு ஆண்டுக்கு 5,000 டன் அளவில் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிர் செய்யப்பட்ட  மக்காச்சோளம் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,100 வரை விலை கிடைக்கிறது. 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.32 ஆயிரம் வரை செலவாகிறது. 3 மாத பராமரிப்புக்கு பின் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை வரை மகசூல் எதிர்பார்த்தோம். ஆனால் சராசரியாக 22 முதல் 25 மூட்டைகள் மகசூல் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் நடப்பாண்டு சாகுபடியில் தயக்கத்தோடு நடவு செய்தோம். தற்போது குவிண்டால் ரூ. 2,100க்கு கொள்முதல் செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.
    Next Story
    ×