search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நெல்லை அருகே கார் மோதி விவசாயி பலி

    நெல்லை அருகே கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானுரை அடுத்த பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் (வயது 76), விவசாயி. இவர் மொபட்டில் தேவர்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவராமனை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு சிவராமன் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×